உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

அவிநாசி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

அவிநாசி: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ பூமி நீள நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபப் பெருநாளை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதியில் நேற்று முன்தினம் லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ பூமி நீளநாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்களில் கார்த்திகை தீபம் தீபஸ்தம்பத்தில் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் சங்கு மற்றும் சக்கரம் வடிவத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.தீபத் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !