திருப்பரங்குன்றம் கோயிலில் கோ பூஜை : பசுபதீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம்
ADDED :1078 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மூலவருக்கு வெள்ளி நாகாபர்ணம் சாத்துப்படியானது. ஆண்டுக்கு முறை மட்டுமே சுவாமிக்கு கவசம் சாத்துப்படியாகும். கோயில் முன்பு பசுக்கள், காளைகள் நிறுத்தப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிவாச்சாரியார்களால் கோபூஜை நடத்தப்பட்டது. மூலவருக்கு அபிஷேகங்கள் முடிந்து வெள்ளி நாகாபர்ணம் சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது.