இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :996 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தை மாதம் ஐந்தாம் நாள் வியாழக்கிழமை குருவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியன் பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி மாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை ஆகியவை கோயிலின் தலைமை சிவாச்சாரியார் தர்மராஜ் சிவம் தலைமையில் தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் கோயில் கண்காணிப்பாளர் கணபதி ராம், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.