உலக நன்மைக்காக பிரத்தியங்கிரா யாகம், 108 சங்கு பூஜை
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் தை மாத அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் மற்றும் 108 சங்கு பூஜையை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி நேற்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது.தொடர்ந்து மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்கு பூஜை நடந்தது. பிரத்திங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருளினார். சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மதுரை, தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநில பக்கங்களும் கலந்து கொண்டனர்.