இழந்த செல்வத்தை பெற... முருகனை வழிபடுங்க..!
ADDED :953 days ago
வெள்ளிக்கிழமையன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாரந்தோறும் மூன்றாண்டு தொடர வேண்டும். இதற்கு ‘கந்த சுக்கிர வார விரதம்’ என்று பெயர். விரதமிருப்பவர்கள் வெள்ளியன்று காலையில் விளக்கேற்றி கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குருகவசம் பாடல்களைப் பாடுவது நல்லது. மதியம் ஒருவேளை உணவும், இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இரவு முருகன் கோயிலில் விளக்கேற்றுவது அவசியம். பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி மூன்றாண்டு விரதமிருந்த பகீரதன்(ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தவர்) இழந்த செல்வத்தை மீட்டார்.