சமயபுரம் கோயிலுக்கு 5000 பக்தர்கள் ஒரே குழுவாக பாதயாத்திரை
ADDED :962 days ago
வடமதுரை: அய்யலூரில் இருந்து ஒரே குழுவாக 5000 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அய்யலூர், வடமதுரை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 34ம் ஆண்டாக அய்யலூர் பகுதியை சேர்ந்த 5000 பேர் கடந்த மாதம் முதல் கையில் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் நேற்று அய்யலுார் களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் குருசாமி பிச்சை தலைமையில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக சுமார் 1000 பேர் என ஒரே குழுவாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் ஞாயிறுயன்று சமயபுரத்தில் தரிசனம் செய்து ஊர் திரும்புவர்.