உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று புதன்கிழமை (01.3.2023) காளஹஸ்திஸ்வரரை சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தி இருக்கும் உண்டியலில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் பக்தர்கள் கடந்த 21  நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் தங்கம் வெள்ளி ஆகியவை கணக்கிடும் பணி நேற்று 1.3.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் அறங்காவல் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசிலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் வங்கி அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதில் மொத்தம் ரொக்க பணமாக ஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 296 ரூபாய மற்றும் தங்கம் 117 கிராம் வெள்ளி 335 கிலோ மேலும் வெளிநாட்டு பணம் 90 இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !