மகா மாரியம்மன் கோவில்மண்டலாபிஷேக நிறைவு
ADDED :4811 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பங்களாதெருவில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.ராஜமாணிக்கம் தலைமையில் ரவி குருக்கள் முன்னிலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு தஞ்சாவூர் ரவி பேண்டு இசை குழுவுடன் அம்மன் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.