உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பாளையம் மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

புதுப்பாளையம் மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசி அடுத்த புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் சென்றனர். அவிநாசி, புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர் .அதனைத் தொடர்ந்து,மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை,பொங்கல் வைத்தல்,கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதல்,கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதன் பின்னர் 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் பூச்சட்டி எடுத்து ஆடுதல், படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல், கரகம் எடுத்தல் நடைபெற்றது. நேற்று, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !