செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் லட்ச தீப விழா
ADDED :908 days ago
செஞ்சி: செஞ்சி பெரியகரம் செல்வ விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. செஞ்சி பெரியகரம் காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் செல்வ வினாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளி காப்பு அலங்காரமும் செய்தனர். மாலை 6 மணிக்கு லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன், சாமி வீதி உலா நடந்தது.