திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :919 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று ராஜகோபுரம் அருகே உள்ள நந்திய பகவானுக்கு பால், சந்தன அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.