மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி திருவிழா
ADDED :893 days ago
மேலுார்: மேலுார், வெள்ளலுார் மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.25 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஏழை காத்தம்மன் கோயில் வீடு மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்தன் உடைப்பு கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். உறவுகள் வலுப்பெற கொழுக்கட்டை வரவேற்பு- இத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வயலில் விளைந்த அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்கள் வீடுகளில் கொடுத்து வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.