பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :992 days ago
மேலூர்: சூரக்குண்டு தெற்க்குவளவார்க்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 9 யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சூரக்குண்டு, மேலுர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.