உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்; மே 30ல் திருக்கல்யாணம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்; மே 30ல் திருக்கல்யாணம்

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 23 காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இதன்படி மே 24 காலை 9:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படும். அன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் உலா வருகிறார். தொடர்ந்து தினமும் பெருமாள் காலையில் ரெங்க மன்னார், ராமர், காளிங்க நர்த்தனம், குழலூதும் பிராண், கீதா உபதேச லீலைகளில் பல்லக்கில் அருள் பாலிக்கிறார். மாலையில் சிம்ம, சேஷ, கருட, ஹனுமன், யானை வாகனங்களில் வீதி வலம் வருகிறார். மே 30 காலை 11:00 - 12:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை பூ பல்லக்கில் தயாருடன் பெருமாள் வலம் வருவார். மே 31 காலை வெண்ணெய்த்தாழி நவநீதகிருஷ்ணன் சேவையும், இரவு குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பரியாகம் லீலை நடக்கிறது. ஜூன் 1 மாலை 4.30 மணிக்கு தேரோட்டம், மறுநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், கவுன்சிலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !