உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் வைகாசி பொங்கல் விழா; கத்தி போட்டு வந்த பக்தர்கள்

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் வைகாசி பொங்கல் விழா; கத்தி போட்டு வந்த பக்தர்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி பொங்கலை முன்னிட்டு கரகம் எடுப்புத் திருவிழா நடைபெற்றது. கோயிலிலிருந்து பத்தர்கள் ஊர்வலமாக மாதரை கிராமத்தில் உள்ள தெப்பத்திற்குச் சென்று அங்கிருந்து கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரகம் எடுத்து வரும் வழியில் துர்தேவதைகள் அணுகாமல் இருக்க பக்தர்கள் கத்திகளை தங்களின் உடலில் வெட்டியபடி வந்தனர். கரகம் கொண்டு வந்து கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முளைப்பாரி மாவிளக்கு, பொங்கல் வழிபாடு தொடர்ந்து கரகம் கரைத்தல் வழிபாடுகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !