வைகாசி கடைசி சனி; வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1051 days ago
கோவை; சூலூர் ஆர். வி .எஸ் .கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசி மாதம் கடைசி சனிக்கிழமை மற்றும் சப்தமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.