ருத்ராட்ச மரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு!
ADDED :4922 days ago
திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள, இரண்டு ருத்ராட்ச மரங்களுக்கு, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். ஆரணி அடுத்த தசராப்பேட்டை, கமண்டல நாகநதி ஆற்றின் வட கரையிலும் தென்கரையிலும் ருத்ராட்ச மரங்கள் இருப்பதை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். நேபாளம், இந்தோனிசியா போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படும் ருத்ராட்ச மரம் இந்த பகுதியில் உள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தனர். இந்த மரத்துக்கு, அப்பகுதி மக்கள், சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.