வைகாசி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :852 days ago
கோவை ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு வைகாசி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.