வைகாசி ஏகாதசி ; லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :848 days ago
கோவை ; சுந்தராபுரம் காமராஜ் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் வைகாசி மாதத்தின் கடைசி புதன்கிழமை, ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.