உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.53 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.53 கோடி

பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.53 கோடி கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் ஜூன் 26,27,28 ல்‌ உண்டியல் எண்ணிக்கை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று (ஜூன் 26)உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 622 கிராம் தங்கம், 9.646 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 53 லட்சத்து 8 ஆயிரத்து 614, மற்றும் 350 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !