உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் நுழைவு வாயிலில் உள்ள நந்திக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் அம்பாள் மற்றும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு சந்திரசேகர சிவாச்சாரியார் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !