அரசமரத்தில் உள்ள தெய்வங்கள் யாவை? எப்போது வணங்க வேண்டும்?
ADDED :962 days ago
அரசமரத்தில் எல்லா தேவதைகளும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அஸ்வத்த நாராயணர் என இதை விஷ்ணுவின் அம்சமாகப் போற்றுவர். பகல் நேரத்தில் இதை வலம் வந்து வணங்கினால், நமது கிரகதோஷம் நீங்கி விடும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரசமரத்தைச் சுற்றுவது கூடாது. அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்துவரும் நாளில் அரசமரத்தை வலம்வருவது இன்னும் சிறப்பு. மனோபலம் அதிகரிக்கும்.