குமரகடவுள் கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :873 days ago
கமுதி: கமுதி அருகே கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சக்தி முருகன் கோயில் இருந்து பக்தர்கள் பறவை காவடி, பால்குடம், காவடி எடுத்து அபிராமம் வழியாக பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜை நடந்தது. கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.