உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அஞ்சலி வரத ஆஞ்சநேயர்

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அஞ்சலி வரத ஆஞ்சநேயர்

செம்பட்டி: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை விழா, நேற்று துவங்கியது. அடிவாரம், மலைகுகை கோயில் ஆகிய இடங்களில், மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பறவை காவடி, பால் காவடி, நீண்ட அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !