காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தரிசனம்
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வேணு கோபால கிருஷ்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசுலு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் வேத பண்டிதர்கள் அவருக்கு குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் புல்லட். ஜெய ஷியாம், தேவஸ்தான அதிகாரிகள் ஏ.இ.ஓ., சதீஷ் மாலிக், கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ் நாகபூஷணம் நாயக் சுதர்சன் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.