முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :876 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு கோயிலில் இருந்து முளைப்பாரிகளை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்ற பக்தர்கள் அரசூரணி குளத்தில் கொட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், தீபம் இந்தியா அறக்கட்டளை சார்பில் முளைப்பாரி எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.