உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நிறைவு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நிறைவு

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.

கற்பக விநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. செப்.,18 காலை சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலை தேர் வடம் பிடித்தலும் நடைபெற்றது. அன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று செப்.,19 காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்பட்டது. இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !