புரட்டாசி ஏகாதசி; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :813 days ago
கோவை : கோவை கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் கரி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.