தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :712 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முன்னதாக சுவாமிக்கு வடைமாலை சாத்துதல் சொர்ணாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்,செண்பகனூர் காலபைரவர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.