/
கோயில்கள் செய்திகள் / முக்களத்தியம்மன் கோவிலில் ராகு கால பூஜை; தீராத கஷ்டங்கள் தீரும்.. பக்தர்கள் நம்பிக்கை
முக்களத்தியம்மன் கோவிலில் ராகு கால பூஜை; தீராத கஷ்டங்கள் தீரும்.. பக்தர்கள் நம்பிக்கை
ADDED :641 days ago
திட்டக்குடி; திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை ராகு கால சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் தீராத கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. கோவில் பூசாரி குமரன், பூஜைகளை செய்தார். சிறப்பு பூஜையில் திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.