/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜர் பெருமானுக்கு தீப மை வைத்து வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜர் பெருமானுக்கு தீப மை வைத்து வழிபாடு
ADDED :671 days ago
திருவண்ணாமலை ; ஆருத்ரா தரிசனத்தை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை யொட்டி, சிவகாமியம்மன் சமேதராய் நடராஜர் பெருமான், ஆயிரம் கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நடராஜர் பெருமானுக்கு முதலில் "தீப மை" வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பிரகாரத்தில் எழுந்தருளிய நடராஜர் பெருமான், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.