உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ஜெயந்தி விழா

திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ஜெயந்தி விழா

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, செங்கம் ரோடிலுள்ள ரமணாஸ்ரமத்தில், பகவான் ரமண மகரிஷியின், 144ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பகவான் சன்னதியில், அதிகாலை, 4:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மார்கழி மாத பூஜை, தமிழ் சிறப்பு பாராயணம், பால் பூஜை, வேத பாராயணம் நடந்தது.
நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளார் இளையராஜா, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். ஏராளமான பக்தர்கள் ரமணரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !