பிருத்தியங்கிரா தேவி கோயிலில் 16அடி உயர பைரவருக்கு புனித நீரால் அபிஷேகம்
தேவகோட்டை; தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பகுதியில் பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயில் வளாகத்தில் பிருத்தியங்கிரா தேவி அம்மன் , மற்றும் பிரமாண்டமான அட்சய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு நிகும்பலயாக பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இக்கோயில் வளாகத்தில் பிரதிருஷ்டை செய்வதற்காக மகாபலிபுரத்தில் இருந்து சிற்பி சுசி கணேஷ் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பைரவர் விக்ரகம் கொண்டு வரப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். கீழே இறக்கப்பட்டவுடன் பைரவருக்கு பக்தர்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர் . மலர்மாலை அணிவித்து 51 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகளை கோயில் நிர்வாகி கருப்பு குருக்கள், ரமேஷ் குருக்கள் செய்தனர் . நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.