உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறை நாள் : ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை நாள் : ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனம் மற்றும் அரசு பஸ்ஸில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்தம் கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் புனித நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, பர்வதவரத்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இன்றி, அங்கும் போக்குவரத்து நெரிசலில் சுற்றுலா பயணிகள் சிக்கி திணறினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !