/
கோயில்கள் செய்திகள் / மாட்டுப்பொங்கல்; தஞசை பெரியகோயில் நந்தியம் பெருமானுக்கு 2000கிலோ காய்கறி, இனிப்புகளால் அலங்காரம்
மாட்டுப்பொங்கல்; தஞசை பெரியகோயில் நந்தியம் பெருமானுக்கு 2000கிலோ காய்கறி, இனிப்புகளால் அலங்காரம்
ADDED :778 days ago
தஞ்சாவூர் ; உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டுத்தோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், கோ பூஜையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இன்று(16ம் தேதி) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு இரண்டாயிரம் கிலோ காய்கறி, கனி,இனிப்பு வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.