உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் மண் சோறு சாப்பிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், 68 வது மாசி பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12 ஆம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். மார்ச் 19 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் மார்ச் 20 ஆம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காப்பு கட்டிய நாள் முதலே பக்தர்கள் தினமும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமையான , இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து குழந்தை வரம் வேண்டியும் நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டியும் பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !