உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட வேண்டியது கிடைக்கும்!

சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட வேண்டியது கிடைக்கும்!

விநாயகரை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாகும். அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது விரதம் இது. சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட நினைத்தது நினைத்தபடி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !