உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், கருட பகவானுக்கு கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 8:00 மணியளவில் உலக மக்கள் நன்மை வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:15 மணியளவில் பிரகாரத்தில் உள்ள கருட பகவானுக்கு விசேஷ திருமஞ்சனம்; 8:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்தள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !