திருப்பூரில் குரு ராகவேந்திர சுவாமி மகோத்சவம் கோலாகலம்
ADDED :411 days ago
திருப்பூர். திருப்பூர், பார்க் ரோடு, ஸ்ரீ குரு ராகவேந்திரா சேவா சங்கம் சார்பில், ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகளின், 353வது ஆராதனை மகோத்சவம் நேற்று துவங்கியது. முதல் நாள் மத்ய ஆராதனை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீராகவேந்திரா அஷ்டாக்ஷரா வாக் ஹோமம் உட்பட பல்வேறு ஹோம பூஜைகளுடன் துவங்கியது. மகா அபிஷேகம், கனகாபிஷேகம், பல்லக்கு சேவை, மகா தீபாராதனை ஆகியன நடந்தன.இரண்டாம் நாளான இன்று காலை சிறப்பு அபிஷேகம், கனகாபிஷேகம், பாத பூஜை, மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (23ம் தேதி), காலை மகா அபிஷேகமும் அதை தொடர்ந்து, ஸ்ரீராகவேந்திரா ஸ்தோத்ர பாராயண நிகழ்வு நடைபெறுகிறது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.