பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
ADDED :305 days ago
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வின்ச் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத் திறனாளிகள் தனிவழி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோயில் யானை கஸ்துாரி வெளிப்பிரகாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிரி வீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார், பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.