வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :330 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை,அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி,தனபூஜை, முதல்கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கோபூஜை, லட்சுமி பூஜை,சப்த கன்னிபூஜை, இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின்பு வீரமாகாளியம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம், தீபாரதனை நடந்தது.கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பலரும் கலந்து கொண்டனர்.