கோயில்களுக்கு காணிக்கையை வாகனத்தில் அமர்ந்தபடியே வீசிச் செல்வது சரிதானா?
ADDED :4904 days ago
வண்டியை நிறுத்தி சற்றுநேரம் இறங்கி அந்த தெய்வத்தை வணங்கிவிட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு சென்றால், தெய்வத்திற்கு மரியாதை செய்வதாக இருக்கும். சில நேரங்களில், உங்கள் காணிக்கை அங்கு நிற்கும் வேறு யாரோ சிலர் கையில் சிக்கவும் வாய்ப்புண்டு. என்ன அவசரம்! இறங்கியே காணிக்கை செலுத்தி விட்டு செல்லுங்கள்.