தை திங்கள்; கோவை கோவில்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :259 days ago
கோவை; தை மாதம் முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை நேரு ஸ்டேடியம் ஆடிஸ் தெரு வேதபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வெண்ணிற வஸ்திரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.
இதேபோல், தை மாதம் முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.