உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்; மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி தேரோட்டம்; மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

ஓசூர்; மதகொண்டப்பள்ளி பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டத்தை, 3 மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாடுகள் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 5 ம் தேதி மாலை, 4:30 மணிக்கு ரத சப்தமி உற்சவம், ஸ்ரீவாரி சந்திரபிரப வாகன உற்சவம், ‍தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், ஸ்ரீவாரி கல்பவிருட்ச வாகன உற்சவம், முத்துபந்தல் உற்சவம், கொடியேற்றம், ஹனுமந்தோற்சவம், சேஷ வாகன உற்சவம், அஸ்வ வாகன உற்சவம், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், கருடோத்சவம், உரடோற்சவம், கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மதியம், 12:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ மூர்த்திகளுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் டோலோற்சவம் நடந்தது. இன்று  சாலிவாகன உற்சவம், சித்ரமண்டபோற்சவம், நாளை துாபசேவை உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஹம்சவாகனோற்சவம் என, பல்வேறு நிழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 19 ல் வதந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !