உள்ளூர் செய்திகள்

சனி அம்மன்!

இப்படி ஒரு அம்மனுக்குப் பெயரா என கேட்டு விடாதீர்கள். அம்மன் வழிபாட்டிற்குரியதாக வெள்ளிக்கிழமை உள்ளது. ஆனால், மேற்குவங்காளத்தில் சனிக்கிழமையும், செவ்வாயும் உகந்ததாக கருதப்படுகிறது. தேவி உபாசகர்கள் பஞ்சபர்வாக்கள் என்னும் ஐந்தைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். பர்வா என்பது நேரத்தைக் குறிக்கும். 1. மாதசங்கராந்தி(மாதப்பிறப்பு) 2. அமாவாசை 3.பவுர்ணமி 4.தேய்பிறை அஷ்டமி 5. சதுர்த்தசி ஆகியவை. இம்முறை வடநாட்டில் பின்பற்றப்படுகிறது. பொதுவாக, தை, ஆடி மாதங்கள் அம்மன் வழிபாட்டுக்கு உகந்தவை. கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அஷ்டமி, சதுர்த்தசி, சிறப்பானவை. நட்சத்திரங்களில் உத்திரம் தேவிபூஜைக்கு உரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !