பூஜைக்கான 5
ADDED :4839 days ago
வீட்டில் பூஜை செய்யும் போது பஞ்சோபசாரம் என்னும் ஐந்து முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இப்படி வழிபட்டால் முழுமையான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தெய்வபடத்தை நன்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்தல், மலர்களால் அலங்கரித்தல், வாசனை தூபம் (சாம்பிராணி)இடுதல், தீபாராதனை செய்தல், படையல் இடுதல்(நைவேத்யம்) ஆகிய ஐந்தும் வழிபாட்டில் இடம்பெற வேண்டும்.