பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
ADDED :199 days ago
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினம் முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநி கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு முன்னிட்டு தரிசனம் செய்ய பாதயாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.