உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்களுக்கு ஆபத்து! ..வேப்பிலை வைத்து வழிபட்ட மக்கள்!

ஆண்களுக்கு ஆபத்து! ..வேப்பிலை வைத்து வழிபட்ட மக்கள்!

மங்கலம்பேட்டை: மாலை நேரத்தில் அமாவாசை பிறந்ததால், ஆண்களுக்கு ஆபத்து என தகவல் பரவியதால், மங்கலம்பேட்டை பகுதியில் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.  நேற்று முன்தினம் மாலை, 5:10 மணிக்கு, சதுர்த்தசி முடிந்து, 5.11 மணிக்கு, அமாவாசை பிறந்தது. இதனால் வீட்டிலுள்ள ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என, தகவல் பரவியது. கடலூர் மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் உட்பட  கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, 3 அகல்  விளக்குகளை ஏற்றி, வேப்பிலை  வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !