சுந்தராபுரத்தில் ஜெகநாத சுவாமி தேரோட்டம் கோலாகலம்
ADDED :208 days ago
கோவை; சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி தியான மந்திர் கோவிலில் ஸ்ரீ ஜெகநாத சுவாமி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரில் பூரி ஜெகன்நாதர், சுபத்ரா தேவி, பலராமர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.