ஐயப்பன் வரலாறு கேட்கணுமா!
ADDED :4825 days ago
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்த பின், அன்றிரவில் ஐயப்பனுக்கு மகரவிளக்கு வழிபாடு நடத்தப்படும். மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க, யானைமீது குடை, சாமரம் ஆகியவற்றுடன் வருவதே மகரவிளக்காகும். இந்த ஊர்வலம் பதினெட்டாம் படியேறும்போது பள்ளிவேட்டைவிளி நடத்தப்படும். அப்போது ஐயப்பனின் வரலாற்றை எடுத்துரைப்பர். இரண்டு நாட்கள் மகரவிளக்கு வழிபாடு நடத்தப்படும்.